17th January 2025 15:32:20 Hours
யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 55 வது காலாட் படைப்பிரிவு மற்றும் 552 வது காலாட் பிரிகேட் படையினர் 2025 ஜனவரி 13ம் திகதி பூநகரி பள்ளிக்குடா கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தை நடத்தினர். அழகான நாடு மற்றும் புன்னகைக்கும் மக்கள் என்ற அரசாங்கத்தின் கருப்பொருளுக்கு இணங்க, "நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழலுக்கான கடற்கரை புத்துயிர் பெறுதல்" என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பொதுமக்கள், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் மற்றும் பிற மாசுபாடுகளை அகற்ற அயராது உழைத்து, கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு தூய்மையான மற்றும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்தனர்.