Header

Sri Lanka Army

Defender of the Nation

17th January 2025 15:32:21 Hours

இலங்கை சமிக்ஞை படையணியின் புதிய படைத் தளபதி கடமை பொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் ஜிஎல்எஸ்டபிள்யூ லியனகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் இலங்கை சமிக்ஞைப் படையணியின் 18வது படைத் தளபதியாக 2025 ஜனவரி 16, அன்று பனாகொடை இலங்கை சமிக்ஞை படையணி தலைமையகத்தில் கடமை பொறுப்பேற்றார்.

வருகை தந்த சிரேஷ்ட அதிகாரியை இலங்கை சமிக்ஞை படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் டிஎஸ் லியனகுணவர்தன அன்புடன் வரவேற்றார், அதைத் தொடர்ந்து நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்து. பின்னர் வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், புதிய தளபதி நினைவு தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து அவர் அதிகாரிகளுடன் குழு படம் எடுத்து கொண்டார்.

மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில், பேரவை உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையணியின் ஊழியர்கள் முன்னிலையில் தனது கடமைகளை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் உத்தியோகபூர்வ ஆவணத்தில் அவர் கையெழுத்திட்டார். அனைத்து நிலையினருக்கும் உரையாற்றிய அவர், இராணுவத் தளபதியின் கருப்பொருளான " Soldiers Centred Army” உடன் ஒத்துப்போகும் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்வில், தொலைதூர இடங்களில் பணியமர்த்தப்பட்ட பணியாளர்கள் ஒரு மெய்நிகர் தளம் மூலம் இணைந்து கொண்டனர்.

அதிகாரிகள் உணவகத்தில் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்து, அதிகாரிகளுக்கான உரை மற்றும் மதிய உணவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.