13th January 2025 10:59:23 Hours
மேஜர் ஜெனரல பீ.ஆர். பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்கள் 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி கடமைகளை 2025 ஜனவரி 09 ஆம் திகதி படைப்பிரிவு தலைமையகத்தில் முறையாக ஒப்படைத்தார்.
இராணுவ சம்பிரதாயங்களுக்கு இணங்க வருகை தந்த வெளிச்செல்லும் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து படைப்பிரிவு படையினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. வெளிச்செல்லும் தளபதி தனது பொறுப்புகளை அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கும் வகையில் தனது அலுவலகத்தில் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.
அவர் படையினருக்கு உரையாற்றிய போது, தனது பதவிக்காலத்தில் அவர்கள் வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார். நன்றியுணர்வின் அடையாளமாக, 52 வது காலாட் படைப்பிரிவுக்கு தளபதியின் தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு நினைவு பரிசு வழங்கினர்.
பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் படைப்பிரிவின் அனைத்து நிலையினரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.