08th January 2025 12:50:08 Hours
592 வது காலாட் பிரிகேடின் 17வது ஆண்டு நிறைவு விழா 29 டிசம்பர் 2024 அன்று பிரிகேட் தளபதி பிரிகேடியர் கேஎல்ஐ கருணாநாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டலின் கீழ், தொடர்ச்சியான நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டது.
இராணுவ சம்பிரதாயத்திற்கு இணங்க, பிரிகேட் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து குழு படம் எடுத்துகொண்டார்.
படையினருக்கு உரையாற்றிய அவர் பிரிகேட்டின் வரலாற்றைப் எடுத்துரைத்துடன், அனைத்து நிலையினருடனான மதிய உணவிருந்திலும் கலந்து கொண்டார்.
இந்த கொண்டாட்டத்தில் கிரிக்கெட் போட்டி இடம்பெற்றதுடன், அதைத் தொடர்ந்து கோவிலில் ஆசீர்வாத பூஜை மற்றும் போதி பூஜையும் இடம் பெற்றது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.