30th December 2024 12:26:45 Hours
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கே.வி.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 27 டிசம்பர் 2024 அன்று பூனானி 23 வது காலாட் படைப்பிரிவிக்கு விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிக்கு 9வது இலங்கை களப் பீரங்கிப் படையணியின் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், வளாகத்தில் மரக்கன்று நாட்டியதுடன் குழுப்படம் எடுத்துக் கொண்ட அவர் அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்தில் கலந்துகொண்டு படையினருக்கு உரையாற்றினார். இதைத் தொடர்ந்து, 23 வது காலாட் படைபிரிவின் தளபதியால், படைப்பிரிவின் வகிபங்கு மற்றும் பணிகள் தொடர்பான விளக்கம் வளங்கப்பட்டது.
வருகையின் நிறைவாக அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் எண்ணங்களை பதிவிட்டார். இவ்விஜயத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.