Header

Sri Lanka Army

Defender of the Nation

30th December 2024 12:29:02 Hours

புதிதாக நிலை உயர்வு பெற்ற இரண்டு மேஜர் ஜெனரல்களுக்கு இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் பாராட்டு

இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் கேஎன்டி கருணாபால ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் மேஜர் ஜெனரல் கேடிபீ டி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஆகியோர்களுக்கு 20 டிசம்பர் 2024 அன்று முறையான பாராட்டு விழா வழங்கப்பட்டது.

புதிதாக நிலை உயர்வு பெற்ற இரண்டு மேஜர் ஜெனரல்களும் வளாகத்திற்கு வருகை தந்ததை தொடர்ந்து மரியாதையுடன் வரவேற்கப்பட்டனர், மேலும் நுழைவாயிலில் இராணுவ சம்பிரதாயத்திற்கு இணங்க தனித்தனி பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

பின்னர், இரு அதிகாரிகளும் சிறப்பு மேடைக்கு அழைக்கப்பட்டதை தொடர்ந்து அணிவகுப்பு மைதானத்தில் இரண்டு தனித்தனி மரியாதை அணிவகுப்புகளில் கௌரவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, சிரேஷ்ட அதிகாரிகள் போர் வீரர்களின் நினைவுச் தூபியில் நாட்டிற்காக உயிர்நீத்த வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் படையினருக்கு உரையாற்றியதுடன் தமது அறிவு மற்றும் உத்வேகம் தொடர்பாக அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டனர்.

மறக்கமுடியாத சந்தர்ப்பத்தை நினைவு கூறும் வகையில் மேஜர் ஜெனரல்கள் இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினர் மற்றும் அதிகாரிகளுடன் குழு படம் எடுத்து கொண்டனர்.

புதிதாக நிலை உயர்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிகள், அனைத்து நிலையினருக்கான தேநீர் விருந்தின்போது கலந்துகொண்ட அனைத்து நிலையினருடன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.