28th December 2024 22:10:56 Hours
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கே.வி.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 26 டிசம்பர் 2024 அன்று கிழக்கு வழங்கல் கட்டளைத் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
இந்த விஜயம் படையினரின் நலன்களை மீளாய்வு செய்வது மற்றும் நிர்வாக விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதாக காணப்பட்டது.
வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிக்கு படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், வளாகத்தில் மரக்கன்று நாட்டியதுடன் குழுப்படம் எடுத்துக் கொண்டார்.
பின்னர், தளபதி படையினருக்கு உரையாற்றினார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.