25th December 2024 20:49:54 Hours
வன்னி வழங்கல் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் டீஏ பீரிஸ் பீடீஎஸ்சீ அவர்கள் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் 11 வது படைத் தளபதியாக 10 டிசம்பர் 2024 அன்று படையணி தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
படையணியின் புதிய படைத் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், நிலைய தளபதியினால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
அதன் பின்னர், சிரேஷ்ட அதிகாரிகள் முன்னிலையில் மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் சிரேஷ்ட அதிகாரி உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.