25th December 2024 17:24:50 Hours
இலங்கை இராணுவத்தின் பிரதம சமிக்ஞை அதிகாரியும் இலங்கை சமிக்ஞைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஐஎச்எம்ஆர்கே ஹேரத் யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 22 டிசம்பர் 2024 அன்று 7 வது இலங்கை சமிஞ்சை படையணியிக்கு உத்தியோகபூர்வ பிரியாவிடை விஜயத்தை மேற்கொண்டார்.
வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியதை வழங்கப்பட்டதுடன், 7 வது இலங்கை சமிஞ்சை படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எம்.ஏ.எஸ்.எஸ். முதுகொட யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார். பின்னர், தனது விஜயத்தின் நினைவாக மாங்கன்று நாட்டியத்துடன் குழுப்படம் எடுத்துக் கொண்டார்.
தொடர்ந்து, அவர் படையினருக்கு உரையாற்றியதுடன், அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் நிறைவாக விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் அவர் தனது பாராட்டுக்களைப் பதிவிட்டார். இலங்கை சமிக்ஞைப் படையணியின் படைத் தளபதியின் 7 வது இலங்கை சமிஞ்சை படையணிக்கான விஜயத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.