23rd December 2024 12:30:43 Hours
55 வது காலாட் படைப்பிரிவு 2024 டிசம்பர் 20 அன்று கிளிநொச்சியில் உள்ள அதன் தலைமையகத்தில் தனது 28 வது ஆண்டு விழாவை கொண்டாடியது.
55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிஜிஎஸ் பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்களுக்கு 19 டிசம்பர் 2024 அன்று 6 வது சிங்க படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், அவர் 55 வது காலாட் படைப்பிரிவு படையினருக்கு உரையாற்றியதுடன் அனைத்து நிலையினருக்குமான மதிய உணவு விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார்.
ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு 18 டிசம்பர் 2024 அன்று கிளிநொச்சி லும்பினி விகாரையில் போதி பூஜை நடாத்தப்பட்டது. மேலும் 21 டிசம்பர் 2024 அன்று கிளிநொச்சியிலுள்ள விசேட தேவையுடைய மூன்று சிறுவர் இல்லங்களுக்கு உணவும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.