19th December 2024 16:25:48 Hours
1 வது விசேட படையணி தனது 36 வது ஆண்டு நிறைவை 1 வது விசேட படையணியி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டிடி மாசிங்க ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 10 டிசம்பர் 2024 அன்று கொண்டாடியது. வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் விசேட படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் மத ஆசிர்வாத நிகழ்வும், போர்வீரர்கள் நினைவுத்தூபியில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.