18th December 2024 14:22:31 Hours
இலங்கை இராணுவ தொண்டர் படையணியினால் மூன்றாவது முறையாக உலர் உணவு பொதிகள் வழங்கும் திட்டம் இலங்கை இராணுவ தொண்டர் படையணி பல்லூடக மண்டபத்தில் இலங்கை இராணுவ தொண்டர் படையணி பிரதி தளபதி (பதில்) மற்றும் பயிற்சி பரிசோதகரின் மேற்பார்வையில் 17 டிசம்பர் 2024 அன்று நடைப்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியின் போது, தலா ரூ. 5000.00 பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் உலர் உணவு பொதிகள் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் 100 சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களிடையே நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.