11th December 2024 13:55:55 Hours
59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிஆர்என் ஹெட்டியாரச்சி ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் அதன் 17வது ஆண்டு நிறைவு விழாவை 01 டிசம்பர் 2024 அன்று படைப்பிரிவு தலைமையகத்தில் கொண்டாடியது
.29 நவம்பர் 2024 அன்று போதி பூஜையுடன் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகியது. ஆண்டு நிறைவு நாளில் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தளபதி சிவில் ஊழியர்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கியதுடன் அனைத்து நிலையினருடனான மதிய உணவு விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார்.
6 டிசம்பர் 2024 அன்று பிரதேச விளையாட்டு மைதானத்தில் இசை நிகழ்ச்சியுடன் நிகழ்வு நிறைவுற்றது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.