Header

Sri Lanka Army

Defender of the Nation

12th December 2024 07:04:18 Hours

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் கே.வி.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 09 டிசம்பர் 2024 அன்று கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

வருகை தந்த புதிய தளபதிக்கு, இலங்கை பீரங்கி படையணி படையினர் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கி வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு கடமைகளை பொறுப்பேற்றார். பின்னர் மரக்கன்று நட்டு குழு படம் எடுத்துக் கொண்டார்.

படையினருக்கு தளபதி ஆற்றிய உரையின் போது அனைத்து நிலையினரினதும் அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவித்ததுடன் ஒழுக்கம் மற்றும் தொழில்முறை திறன்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.