11th December 2024 07:10:27 Hours
11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி 07 அதிகாரிகள் மற்றும் 295 சிப்பாய்களின் பங்குபற்றலுடன் 2024 ஒக்டோபர் 14 முதல் டிசம்பர் 02 வரை முழங்காவில் உள்ள படையலகு பயிற்சிப் பாடசாலையில் தனது படையலகு பயிற்சி பாடநெறி வெற்றிகரமாக நிறைவு செய்தது.
51 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எம்பீஎன்ஏ முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் விருந்தினராக கலந்து கொண்டு நிறைவுரை ஆற்றியதுடன் பங்கேற்பாளர்களின் அர்ப்பணிப்பை பாராட்டினார்.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.