09th December 2024 19:27:22 Hours
55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பி.ஜி.எஸ். பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்கள் 06 டிசம்பர் 2024 அன்று 7 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சார்ஜன் டபிள்யூடிஐ தினேஷ் குமார அவர்களின் குறிப்பிடத்தக்க துணிச்சலைப் பாராட்டினார்.
கிளிநொச்சி மலையாளபுரம் முகாமுக்கு அருகில் 2024 நவம்பர் 28 அன்று 19.10 மணியளவில் நடாத்த முயற்சித்த ஒரு கொள்ளையை சிப்பாய் துணிச்சலாக செயற்பட்டு தடுத்துள்ளார். இந்த செயற்பாடானது, இராணுவ நிபுணத்துவத்தை எடுத்துக்காட்டுவதுடன், தேசிய பாதுகாப்பை மட்டுமன்றி, சமூகங்களின் நல்வாழ்வை பாதுகாப்பதில் இலங்கை இராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சேவையை எடுத்துக்காட்டுகிறது.