07th December 2024 06:30:13 Hours
4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரியின் வழிகாட்டுதலின் கீழ், 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினர் 04 டிசம்பர் 2024 அன்று தம்புள்ளை கிரலகொல்ல பாலர் பாடசாலையில் ஒரு விளக்கக்காட்சியை நடாத்தினர்.
இந்நிகழ்வில் 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.யூ. கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
ரங்கிரி தம்புள்ளை ரஜமஹா விகாரை உட்பட தம்புள்ளை பிரதேசத்தின் வரலாற்று பின்னணியில் 11 வது காலாட் படைப்பிரிவில் சேவையாற்றும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் அறிவு மற்றும் வழங்கல் திறன்களை மேம்படுத்துவதற்காக இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.