05th December 2024 19:52:48 Hours
மேஜர் ஜெனரல் கேஎன்டி கருணபால ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 56 வது காலாட் படைப்பிரிவின் 30 வது தளபதியாக 02 டிசம்பர் 2024 அன்று படைப்பிரிவு தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.
வருகை தந்த புதிய தளபதிக்கு 56 வது காலாட் படைப்பிரிவு படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் அவரது புதிய நியமனத்தை ஏற்றுக்கொண்டதை குறிக்கும் வகையில், உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். பின்னர் குழுப்படம் எடுத்துகொண்ட அவர், படையினருக்கான உரையின் போது தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.