05th December 2024 22:03:34 Hours
இலங்கை கவச வாகன படையணியின் 15 வது படைத் தளபதியான மேஜர் ஜெனரல் எம்எஸ் தேவப்பிரிய யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் 2024 நவம்பர் 30 ம் திகதி கவச வாகன பயிற்சி நிலையத்திற்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார்.
வருகை தந்த படைத் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, மரக்கன்று நாட்டுதல் மற்றும் குழுப்படம் எடுத்தல் போன்றன இடம்பெற்றன. பின்னர் பயிற்சி நிலைய தளபதியினால் விரிவான விளக்கம் வழங்கப்பட்டதை தொடர்ந்து, சிப்பாயின் தொழில், நிதி முகமைத்துவம் மற்றும் சுய ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அதிகாரிகளுக்கு உரை நிகழ்தினார். இது முகாம் விஜயம் மற்றும் படையினருக்கான உரை என்பவற்றை தொடர்ந்து இடம்பெற்றது.
அதிகாரிகள் உணவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள் மற்றும் மதிய உணவுடன் அன்றைய நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன. வெளிசெல்வதற்கு முன் படைத் தளபதி அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் கருத்துகளை பதிவிட்டார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.