03rd December 2024 14:36:34 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் 2 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணிக்கு 2 டிசம்பர் 2024 அன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த தளபதி கட்டளை அதிகாரியினால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, நிகழ்வைக் குறிக்கும் வகையில் மரக்கன்று நாட்டப்பட்டதுடன், படையணியின் செயற்பாடுகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பாக கட்டளை அதிகாரியினால் விரிவான விளக்கம் வழங்கப்பட்டது.
தளபதி தனது உரையின் போது, சமூக மாற்றங்களுக்கு ஏற்ப சுய ஒழுக்கம், ஒருமைப்பாடு மற்றும் தொழில்முறை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
படையணியின் ஆய்வு மற்றும் அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் தனது கருத்துகளை பதிவிட்டதுடன் விஜயம் நிறைவுற்றது. சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர்.