03rd December 2024 17:09:01 Hours
பீரங்கி பிரிகேட் தளபதி பிரிகேடியர் டிஜீஐஎ ஆரியரத்ன ஆர்எஸ்பீ ஐஜி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2024 நவம்பர் 24 அன்று பீரங்கி பிரிகேட் தனது 36 வது ஆண்டு நிறைவு விழாவை பெருமையுடன் கொண்டாடியது.
2024 நவம்பர் 20 முதல் 23 வரை நடைபெற்ற நிகழ்வுகளில் மின்னேரிய தேவாலயத்தில் பூஜை, முகாமில் போதி பூஜை, நாகல கந்த ரஜ மகா விகாரையில் 14 பிக்குகளுக்கு தானம் வழங்குதல், சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் ஒன்றுகூடல், மற்றும் கிரிக்கெட் போட்டி போன்றன இடம்பெற்றன.
ஆண்டு நிறைவு நாளில், பீரங்கி பிரிகேட் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கி கௌரவிக்கப்பட்டார், பின்னர் மரக்கன்று நாட்டியதை தொடர்ந்து குழு படம் எடுத்துகொண்ட அவர் அனைத்து நிலையினருக்குமான மதிய உணவிலும் கலந்து கொண்டார். அதிகாரிகள் உணவகத்தில் இடம்பெற்ற ஒன்றுகூடல் நிகழ்வுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.