02nd December 2024 14:28:52 Hours
20 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி தனது 16வது ஆண்டு நிறைவை 2024 டிசம்பர் 01 அன்று 20 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி வளாகத்தில், இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில், 20 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் பீசீடி கமகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கொண்டாடியது.
முகாம் வளாகத்திற்கு வருகை தந்த கட்டளை அதிகாரிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் படையணி அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவர் குழு படம் எடுத்து கொண்டதுடன், படையினருக்கு உரையாற்றினார், மேலும் அனைத்து நிலையினருக்கான மதிய உணவிலும் கலந்துகொண்டார்.
தொடர்ந்து 20 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையனருக்கு ஆசீர்வாதம் வேண்டி சீனிகம விகாரை மற்றும் முகாம் வளாகத்தில் போதி பூஜை நடத்தப்பட்டது.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள்,அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.