02nd December 2024 14:50:17 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜேபீசீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் 9 வது கஜபா படையணி மற்றும் 5 வது (தொ) கஜபா படையணிகளுக்கு 30 நவம்பர் 2024 அன்று விஜயம் மேற்கொண்டார்.. இந்த விஜயம் படையலகுகளின் செயல்பாட்டுத் தயார்நிலை, நிர்வாக விடயங்களை மதிப்பிடுவதாகும்.
வருகை தந்த தளபதிக்கு வாகன தொடரணிக்கு மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து ஒவ்வொரு இடங்களிலும் கட்டளை அதிகாரிகளால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். பின்னர், ஒவ்வொரு படையலகுகளின் பொறுப்புகள், கடமைகள், பணிகள் மற்றும் தற்போதைய பொறுப்புகள் தொடர்பாக சிரேஷ்ட அதிகாரிகள் விளக்கினர். பின்னர், வருகை தந்த சிரேஷ்ட அதிகாரி, அதிகாரிகள் மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரிகளிடம் கலந்துரையாடினார். அன்றைய நிகழ்வுகளின் நிறைவை குறிக்கும் வகையில், தளபதி அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டுக் குறிப்புகளைப் பதிவிட்டதுடன் விஜயம் நிறைவுற்றது.
இந்த விஜயத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.