30th November 2024 14:16:42 Hours
பாதகமான காலநிலைக்கு பதிலளிக்கும் வகையில், 2024 நவம்பர் 28 அன்று தந்திரிமலை மற்றும் கஜசிங்கபுர இடையேயான பாதையை 5 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் சுத்தம் செய்தனர்.
213 வது பிரிகேட் தளபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் பாதையை 5 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்ட இந்த அனர்த்த நிவாரண முயற்சியின் போது பாதைக்கு இடையூறாக வீழ்ந்திருந்த மரங்கள் படையினரால் அகற்றப்பட்டன. போக்குவரத்து மற்றும் பொது பாதுகாப்பை மீட்டெடுப்பதை உறுதி செய்யும் வகையில் பணி விரைவாக நிறைவுசெய்யப்பட்டது.