Header

Sri Lanka Army

Defender of the Nation

28th November 2024 13:59:39 Hours

இலங்கை இராணுவ தொண்டர் படையணி படையினருக்கு காப்புறுதி திட்டம்

இலங்கை இராணுவ தொண்டர் படையணி இலங்கை காப்புறுதிக் கூட்டுதாபனத்துடனான தனது தனது ஒத்துழைப்பை புதுப்பித்து, அதன் உறுப்பினர்களுக்கு காப்புறுதி பலன்களை வழங்குவதற்காக "விருசவிய" என்ற புதிய ஒப்பந்தத்தில் நுழைந்துள்ளது. 28 நவம்பர் 2024 அன்று கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் 01 டிசம்பர் 2024 முதல் 30 நவம்பர் 2025 வரை அமுலில் இருக்கும்.

இந்த நிகழ்வு கொழும்பில் உள்ள இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபன தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஒப்பந்தத்தில் இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிகேஜிஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சி ஐஜீ இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபன தலைமை நிர்வாக அதிகாரி திரு.சந்தன எல். அலுத்கம ஆகியோர் கையெழுத்திட்டனர்.

2005 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்தக் கூட்டாண்மை, வெளிப்புற மற்றும் உள்ளக மருத்துவ சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள், பிரசவம் மற்றும் இறப்புச் சலுகைகள் உட்பட பலதரப்பட்ட நலன்புரி நன்மைகளை வழங்குகிறது. இலங்கை இராணுவ தொண்டர் படையணி படையினரின் நலனுக்கான தொடர்ச்சியான ஆதரவை உறுதி செய்வதற்காக இந்த ஒப்பந்தம் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படுகிறது.

இலங்கை இராணுவ தொண்டர் படையணி சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.