20th November 2024 12:27:50 Hours
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்பீஎஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீஎல்எஸ்சீ அவர்கள் 18 நவம்பர் 2024 அன்று 4 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார். வருகை தந்த படைத் தளபதியின் வாகன தொடரணிக்கு மரியாதை வழங்கப்படைதை தொடர்ந்து கட்டளை அதிகாரியினால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். இவ் விஜயத்தின் போது வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு ஆலையை திறந்து வைத்து, குழு படம் எடுத்து கொண்டார்.
தொடர்ந்து, அவர் படையணியின் வெற்றிக்கு அவர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பை எடுத்துரைத்து உரையாற்றினார். அவரது உரையைத் தொடர்ந்து, படையினருடன் சுமூகமான கலந்துரையாடலுடன் தேநீர் விருந்தில் கலந்து கொண்டார். அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் படைத் தளபதி தனது எண்ணங்களை பதிவிட்டதை தொடர்ந்து நிகழ்வு நிறைவுற்றது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.