26th November 2024 17:29:31 Hours
வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜே.பீ.சி பீரிஸ் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட ‘அடிப்படை தமிழ் மொழி பாடநெறி எண் - II’ நிறைவு விழா 2024 நவம்பர் 23 ஆம் திகதி வன்னி பாதுகாப்பு படை தலைமையக கேணல் பொதுப்பணி கேணல் ஆர்எம் சுபசிங்க ஆர்எஸ்பீ அவர்களின் அனுசரணையுடன் நடைபெற்றது.
வன்னி பாதுகாப்பு படை தலைமையக பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் கேஎம்வி கொடித்துவக்கு அவர்களின் மேற்பார்வையின் கீழ், ஒரு மாத காலம் நடைபெற்ற பாடநெறி நிறைவடைந்தது.
வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தின் அனைத்து படையணிகளை சேர்ந்த மாணவர்களால் அவர்களின் மொழி மேம்பாடு மற்றும் ஆர்வத்தை வெளிப்படுத்தும் நிகழ்வுகளால் நிகழ்வு அலங்கரிக்கப்பட்டது.
இலங்கை இராணுவத்தின் பல படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 39 ஆண் மற்றும் இரண்டு பெண் படையினர் ஆர்வத்துடனும் பாடநெறியை பின்பற்றினர்.
2 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியின் சிப்பாய் கேஜிஎன்எஸ் தில்ரங்கி பாடநெறியின் சிறந்த மாணவியாக விருது பெற்றார்.