25th November 2024 22:58:46 Hours
55 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி மேஜர் ஜெனரல் பிஜீஎஸ் பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்கள் 552 வது காலாட் பிரிகேட், 22 வது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 2 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி ஆகியவற்றுக்கு 23 நவம்பர் 2024 அன்று உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
ஒவ்வொரு இடத்திலும், வருகை தந்த படைப் பிரிவின் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து அந்தந்த பிரிவுகளின் சிரேஷ்ட அதிகாரிகளால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.
இவ் விஜயத்தில் படைப் பிரிவின் தளபதி பிரிவுகளின் செயல்பாடு, மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் ஒவ்வொரு அமைப்பின் தற்போதைய நிலை தொடர்பான விரிவான விளக்கங்களை பெற்று கொண்டார். இவ் விஜயத்தின் போது சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.