24th November 2024 09:36:03 Hours
55 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் அதன் வெளிச்செல்லும் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்கேஎன்சி ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களுக்கு 19 நவம்பர் 2024 அன்று படைப்பிரிவு தலைமையகத்தில் இராணுவ மரபுகளுக்கு இணங்க பிரியாவிடை வழங்கப்பட்டது.
இராணுவ மரபுகளுக்கு இணங்க, வெளிச்செல்லும் படைப்பிரிவு தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அன்றைய தினத்தின் நினைவாக தளபதி குழு படம் எடுத்துகொண்டார். பின்னர், அனைத்து நிலையினருக்கும் உரையாற்றியதுடன் தேநீர் விருந்துபசாரத்திலும் தளபதி கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.