19th November 2024 15:05:42 Hours
கண்டி குலுகம்மன பிரேமரத்ன மகா வித்தியாலயத்தின் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க, 11 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கேஏயூ கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜி அவர்கள் 2024 நவம்பர் 18 ஆம் திகதி இடம்பெற்ற மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இவ்விழாவின் போது, காலாட் படைப்பிரிவு தளபதி, அதிபருடன் இணைந்து, புதிய மாணவ தலைவர்களுக்கு சின்னங்களை அணிவித்தார். பின்னர் அவர் ஆற்றிய சுருக்கமான உரையின் போது, வலுவான தலைமைத்துவமானது ஒழுக்கம், பொறுப்பு மற்றும் பயனுள்ள தலைவர்களை உருவாக்குவதற்கான அர்ப்பணிப்பை கொண்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டினார்.
இந்நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.