19th November 2024 15:05:46 Hours
பிரிகேடியர் டபிள்யூஎம்என்கேடி பண்டார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் மின்னேரிய காலாட் பயிற்சி நிலையத்தின் 45வது தளபதியாக திங்கட்கிழமை (18) நவம்பர் 2024 அன்று காலாட் பயிற்சி நிலைய அலுவலக வளாகத்தில் மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றார்.
வருகை தந்த புதிய தளபதி கட்டளை அதிகாரியால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து காலாட் பயிற்சி நிலைய படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியதை வழங்கப்பட்டது.
அவர் தனது கடமையை ஏற்றுக்கொண்டதை குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரை நிகழ்தியதுடன் நிகழ்வுகள் நிறைவுற்றன.
இந்நிகழ்வில் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் காலாட் பயிற்சி நிலையத்தின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.