12th November 2024 17:35:15 Hours
56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் எம்பீஎன்ஏ முத்துமாலை யுஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில் பெரும் போகத்திற்கான நெற் செய்கை 08 நவம்பர் 2024 அன்று ஒரு சுப நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் 6 ஏக்கர் நெல் வயல்களில், குறைந்த காலத்தில் அறுவடை செய்யக்கூடிய நாற்று வகை விதைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.