12th November 2024 17:34:23 Hours
10 வது தேசிய பாதுகாவலர் படையணி அதன் 34 வது ஆண்டு நிறைவு விழாவை 10 வது தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எஸ்பிஜேசீ சேமசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2024 நவம்பர் 02 அன்று 10 வது தேசிய பாதுகாவலர் படையணி தலைமையகத்தில் கொண்டாடியது.
ஆண்டு நிறைவு நாளில் 10 வது தேசிய பாதுகாவலர் படையணி தலைமையகத்தில் கட்டளை அதிகாரிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து கட்டளை அதிகாரி படையினரிடம் உரையாற்றினார். பின்னர் அனைத்து நிலையினருக்கான தேநீர் விருந்து மற்றும் அனைத்து நிலையினருக்கான மதிய உணவு விருந்தும் இடம் பெற்றது.
ஆண்டு நிறைவு நாளுக்கு முன்னதாக, வீரமரணம் அடைந்த போர்வீரர்கள் மற்றும் 10 வது தேசிய பாதுகாவலர் படையணி படையினருக்கு ஆசிர்வாதம் வழங்கும் வகையில் போதி பூஜை நடத்தப்பட்டது. 10 வது தேசிய பாதுகாவலர் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.