12th November 2024 17:44:16 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2024 நவம்பர் 05 அன்று புத்தளம் 143 வது காலாட் பிரிகேட்டிற்கு விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த சிரேஷ்ட அதிகாரியின் வாகன தொடரணிக்கு முறையான மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து சிரேஷ்ட அதிகாரிகளால் வரவேற்கப்பட்டார்.
இந்த விஜயத்தின் போது 143 வது காலாட் பிரிகேட் தளபதியினால் பிரிகேட்டின் பங்கு, பொறுப்புகள் மற்றும் செயற்பாட்டுத் தயார்நிலை தொடர்பான விளக்கம் வழங்கப்பட்டது. பின்னர் முகாம் வளாகத்தை பார்வையிட்டதுடன் மரக்கன்று நட்டுவைத்த அவர் அதிதிகள் பதிவேட்டில் கருத்துக்களை பதிவிட்டார்.
143 வது காலாட் பிரிகேட்டுக்கு அவர் விஜயம் செய்ததைத் தொடர்ந்து, அவர் 16 வது கஜபா படையணிக்கும் விஜயத்தை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.