11th November 2024 16:54:19 Hours
இலங்கை இராணுவத்தின் உபகரண பணிப்பாளர் நாயகமும் இலங்கை கவச வாகன படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்எஸ் தேவப்பிரிய அவர்கள் 2 நவம்பர் 2024 அன்று 5 வது கவச புலனாய்வு படையணிக்கு விஜயம் மேற்கொண்டார்.
வளாகத்திற்கு வருகை தந்த படைத் தளபதி மரியாதையுடன் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
இந்த விஜயத்தின் போது, கட்டளை அதிகாரி படையலகின் செயற்பாடுகள் மற்றும் சமீபத்திய சாதனைகள் தொடர்பான விரிவான விளக்கத்தை படைத் தளபதிக்கு விளக்கினார். பின்னர் நிகழ்வின் சிறப்பம்சமாக படையினர்களுடன் குழு படம் எடுத்தல் மற்றும் மர நடுகை என்பனவும் இடம்பெற்றன.
அதன் பின்னர், படைத் தளபதி அனைத்து நிலையினருடன் தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதுடன், தனது அனுபவத்திலிருந்து பெறுமதியான அறிவுகளை வழங்கி படையினருக்கு உரையாற்றினார்.
பின்னர் சிரேஷ்ட அதிகாரி முகாம் வளாகத்தை பார்வையிட்டதுடன், அவர் தனது விஜயத்தின் போது, படையலகின் திறன் மற்றும் தொழில்திறனை மேம்படுத்துவதற்கான வழிகாட்டல்களை வழங்கி அதிகாரிகளுக்கு உரையாற்றினார்.
படைத் தளபதி புறப்படுவதற்கு முன் விருநதினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டுக் குறிப்புகளை பதிவிட்டார். படையணியின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.