08th November 2024 14:52:10 Hours
7 வது விஜயபாகு காலாட் படையணி தனது 32 வது ஆண்டு நிறைவு விழாவை 03 நவம்பர் 2024 அன்று 7 வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எஎடியூடபிள்யூ அரங்கல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தலைமையகத்தில் தொடர்ச்சியான நிகழ்வுகளுடன் கொண்டாடியது.
ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, படையினர் போதி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதுடன், 7 வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரியை கௌரவிக்கும் வகையில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கினர். அதனைத் தொடர்ந்து, கட்டளை அதிகாரி, போர் வீரர்களின் நினைவுத் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தியதுடன் வளாகத்தில் மரக்கன்று நாட்டினார்.
பின்னர், குழு படம் எடுத்துகொண்ட அவர் படையினருக்கு உரையாற்றியதை தொடர்ந்து அனைத்து நிலையினருக்கான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார். பின்னர் அனைத்து நிலையினருக்கான மதிய உணவிலும் கலந்து கொண்டார்.
ஆண்டு நிறைவு விழாவின் ஒரு பகுதியாக படையினர், 2024 நவம்பர் 05 அன்று லக்தரு பாலர் பாடசாலையின் 21 பிள்ளைகளுக்கு மதிய உணவு வழங்கினர்.