02nd November 2024 11:13:59 Hours
54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்பீஏஆர்பீ ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 541 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ், 10 வது (தொ) கெமுனு ஹேவா படையணி படையினரால் மன்னார் மாதோட்டை விகாரையில் 2024 ஒக்டோபர் 19 மற்றும் 20ம் திகதிகளில் கட்டின பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்விற்கு கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த திரு.தம்மிக்க பெர்னாண்டோ மற்றும் திருமதி தேவிகா பெர்னாண்டோ ஆகியோர் அனுசரணை வழங்கினர்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், பொலிஸ் மற்றும் முப்படையினர் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.