30th October 2024 19:56:27 Hours
சீனாவால் நன்கொடையாக வழங்கப்பட்ட வெடிக்கும் ஆயுதங்களை அகற்றும் உபகரணங்களுக்கான அறிமுகப் பயிற்சி 28 ஒக்டோபர் 2024 அன்று நடைபெற்ற விழாவுடன் நிறைவடைந்தது. மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல.ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் சான்றிதழ்களை வழங்கியதுடன், 32 மில்லியன் இலங்கை ரூபாய் மதிப்பிலான வெடிபொருள் அகற்றும் உபகரணங்கள் வழங்கிய சீனாவின் ஆதரவைப் பாராட்டினார்.
இந்த நிகழ்வின் போது பங்கேற்பாளர்களுக்கு மேம்பட்ட திறன்களை எடுத்துக்காட்டும் ஆர்ஈஓடி 4000 (REOD 4000) மற்றும் ஆர்ஈஓடி 400 (REOD 400) ரோபோக்களின் நேரடி விளக்கங்கள் இடம்பெற்றன. பாதுகாப்பு இணைப்பாளர் சிரேஷ்ட கேணல் சாஹு போ உட்பட சீன சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் உபகரண உற்பத்தியாளர் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பிரதம களப் பொறியியலாளர் மேஜர் ஜெனரல் டி.சி. பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 20 அதிகாரிகள் மற்றும் 42 சிப்பாய்கள் இப்பயிற்சியை முடித்தனர். இது வெடிக்கும் அச்சுறுத்தல்களை நிர்வகிப்பதற்கும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பங்களிப்பதற்கும் படையணியின் தயார்நிலையை மேம்படுத்தியது.