28th October 2024 13:40:25 Hours
58 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஜே.கே.ஆர் ஜயக்கொடி ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ அவர்கள் 2024 ஒக்டோபர் 20 அன்று குருநாகல் 583 வது காலாட் பிரிகேடிற்கு விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த சிரேஷ்ட அதிகாரியை, 583 வது காலாட் பிரிகேட் தளபதி மரியாதையுடன் வரவேற்றதுடன், பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். பின்னர், பிரிகேடின் செயற்பாட்டு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து விரிவான விளக்கத்தை பிரிகேட் தளபதி வழங்கினார்.
இந்த விஜயத்தின் போது, காலாட் படைப்பிரிவு தளபதி படையினருக்கு ஒற்றுமை மற்றும் அர்ப்பணிப்புடைய சேவையை வலியுறுத்தி உரையாற்றியதுடன், இந்நிகழ்வின் நினைவாக முகாம் வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நாட்டினார். அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துடன் இந்த விஜயம் நிறைவுற்றது. இந்த விஜயத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.