28th October 2024 15:43:58 Hours
இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 9 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ், 9 வது இலங்கை சிங்க படையணி யட்டியானவில் தேவையுடைய குடும்பத்திற்கான புதிய வீட்டை நிர்மாணித்தது.
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 23 ஒக்டோபர் 2024 அன்று நடைபெற்ற வீடு திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு வீட்டு சாவியை பயனாளிக்கு வழங்கினார்.
உள்ளூர் நன்கொடையாளர்கள் வழங்கிய அனுசரணையுடன் இந்த வீடு கட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.