23rd October 2024 15:34:47 Hours
மாதுரு ஓயா இராணுவ பயிற்சிப் பாடசாலையின் புதிய தளபதியாக கெமுனு ஹேவா படையணியின் பிரிகேடியர் எம்கேடிபீ மாபலகம பீஎஸ்சி அவர்கள் 21 ஒக்டோபர் 2024 அன்று, மத அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
வருகை தளபதிக்கு நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. மத ஆசீர்வாதங்களைத் தொடர்ந்து தளபதி, உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டு உத்தியோகபூர்வமாக கடமைகளை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்வின் நினைவாக இராணுவ பயிற்சி பாடசாலை வளாகத்தில் ‘நாக மரக்கன்று’ நட்டதுடன், படையினருக்கு உரையாற்றினார்.
இந்நிகழ்வில் இராணுவ பயிற்சி பாடசாலையின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.