23rd October 2024 15:36:45 Hours
இலங்கை இராணுவ மகளிர் படையணியின் வெளியேறும் படைத்தளபதியான மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களுக்கு 2024 ஒக்டோபர் 20 அன்று பொரளை இலங்கை இராணுவ மகளிர் படையணி தலைமையகத்தில் இலங்கை இராணுவ மகளிர் படையணி பிரியாவிடை மரியாதை வழங்கியது.
வருகை தந்த தளபதியை நிலைய தளபதி வரவேற்றதுடன் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டது. அதன்பின்னர் அவர் இராணுவ வீரர்களின் நினைவுத்தூபியில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மலர் அஞ்சலி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்தில் கலந்து கொண்டதுடன் அதனை தொடர்ந்து சிரேஷ்ட அதிகாரி படையினருக்கு உரையாற்றினார். இலங்கை இராணுவ மகளிர் படையணி அதிகாரிகளின் உணவகத்தில் பிரியாவிடை இரவு விருந்துடன் நிகழ்வு நிறைவுற்றது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.