22nd October 2024 14:20:53 Hours
கேணல் பீடப்ளியூஆர்டப்ளியூஎம்ஜேஆர்பிடப்ளியூ பல்லேகும்புர அவர்கள் ஆலங்குளத்திலுள்ள படையலகு பயிற்சிப் பாடசாலையின் புதிய தளபதியாக 16 ஒக்டோபர் 2024 அன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.
வருகை தந்த தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. சம்பிரதாயங்களுக்குப் பிறகு, புதிய தளபதி நிகழ்வைக் குறிக்கும் வகையில் வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நாட்டினார். மத ஆசீர்வாதங்களைத் தொடர்ந்து, அவர் தனது கடமைகளை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் ஆவணங்களில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டார்.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.