18th October 2024 21:49:40 Hours
மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் 11 வது காலாட் படைப்பிரிவுக்கு 14 ஒக்டோபர் 2024 அன்று அதிகாரப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
வருகை தந்த தளபதியை 11 வது காலாட் படைப்பிரிவு தளபதி படைப்பிரிவு நுழைவாயிலில் வரவேற்றார். அதனை தொடர்ந்து 5 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினர் அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையினை வழங்கினர்.
இந்த விஜயத்தின் போது, மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி குழுபடம் எடுத்துக்கொண்டதுடன் இந்த நிகழ்வை நினைவு கூறும் விதமாக மரக்கன்று நாட்டியதுடன் அதனை தொடர்ந்து படையினருக்கு உரையாற்றினார். அனைத்து நிலையினருடனான தேநீருடன் விஜயம் நிறைவுற்றது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.
மேலும், 11 வது காலாட் படை பிரிவுக்கு விஜயம் செய்ததை ஒட்டி, மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகள், புனித தலதா மாளிகையின் தியவதன நிலமே மற்றும் மத்திய மாகாண ஆளுநர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.