Header

Sri Lanka Army

Defender of the Nation

18th October 2024 21:49:37 Hours

56 வது காலாட் படைப்பிரிவினால் வவுனியாவில் பொதுமக்களுக்கான பார்வை நல மேம்பாட்டு திட்டம்

56 வது காலாட் படைப்பிரிவு, உதவி மீள்குடியேற்றம் மற்றும் மறுமலர்ச்சி அமைப்பு மற்றும் அலகா அறக்கட்டளையுடன் இணைந்து 16 ஒக்டோபர் 2024 அன்று பன்றிக்கெய்தகுளத்தில் பொதுமக்களுக்கு மூக்குகண்ணாடி வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது.

இம் முயற்சி 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ். கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்ட்டலின் கீழ் 563 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் வைஎம்எஸ்சிபி ஜயதிலக ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.

இத் திட்டத்திற்கு உதவியினை உதவி மீள்குடியேற்றம் மற்றும் மறுமலர்ச்சிக்கான அமைப்பின் செயலாளர் கலாநிதி வேலாயுதம் சர்வேஸ்வரன் வழங்கியதுடன் 7 வது இலங்கை சிங்க படையணி ஒருங்கிணைப்பு உதவிகளை வழங்கியது.

இந்தத் திட்டம் உள்ளூர் சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது மற்றும் அதன்படி 131 பார்வை குறைபாடுடைய நபர்கள் திட்டத்தின் கீழ் பயனடைந்தனர்.