Header

Sri Lanka Army

Defender of the Nation

19th October 2024 13:00:10 Hours

முதலாம் படையின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் எம்டிஐ மஹாலேகம் டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் கிளிநொச்சி முதலாம் படையின் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் 16 ஒக்டோபர் 2024 அன்று 6 வது தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றார்.

முதலாம் படைத் தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலில் புதிய தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின.

அதனைத் தொடர்ந்து, அவரை பிரிகேடியர் பொது பணி பிரிகேடியர் ஜீபீபீ குலதிலக்க என்டிசீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றதுடன், கெமுனு 1வது கெமுனு ஹேவா படையணியின் படையினர் அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கினர்.

அதன்பிறகு, மத ஆசிர்வாதங்களுக்கு மத்தியில், 'செத்பிரித்' பாராயணத்தை தொடர்ந்து, மேஜர் ஜெனரல் எம்டிஐ மஹாலேகம் டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீஅவர்கள் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டு கடமையை பொறுப்பேற்றார்.

பின்னர், தலைமையக வளாகத்தில் மரக்கன்று நடும் முன்,முதலாம் படைத் தளபதி, தலைமையகத்தின் படைப் பிரிவின் தளபதிகள், பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், பணி நிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் குழு படம் எடுத்துக் கொண்டார்.

பின்னர் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் உரையாற்றியதுடன் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விளக்கமளித்தார்.

நிகழ்வின் நிறைவில் முதலாம் படையின் அனைத்து நிலையினருக்கான தேநீர் விருந்தில் கலந்து கொண்டார்.