18th October 2024 15:40:22 Hours
மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் 2024 ஒக்டோபர் 15 ம் திகதி 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணிக்கு விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதியை இராணுவ மரபுகளுக்கமைய 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி கட்டளை அதிகாரி மேஜர் பீகே வருவன்கொடகே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எல்எஸ்சி அவர்கள் வரவேற்றார்.
படையலகின் பங்கு மற்றும் பணிகள் பற்றிய விரிவான விளக்கத்தைப் பெற்ற பின்னர், சிரேஷ்ட அதிகாரி படையினருக்கு உரையாற்றினார்.
இந்நிகழ்வில் 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.