18th October 2024 21:16:39 Hours
இந்திய உயர் பாதுகாப்பு முகாமைத்துவ பாடநெறி பிரதிநிதிகளின் இலங்கைக்கான விஜயத்தின் ஒரு பகுதியாக மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் 17 ஒக்டோபர் 2024 அன்று தியத்தலாவ மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு அழைப்பு விடுத்தார்.
வருகை தந்த தூதுக்குழுவை மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி வரவேற்று அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
விஜயத்தின் நிறைவில், அதிகாரிகளுக்கு விசேட நினைவுச் சின்னங்களை வழங்கி, அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பிரிகேடியர் பொதுப்பணி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.