16th October 2024 19:15:02 Hours
இராணுவ வழங்கல் கட்டளை தளபதி மற்றும் இலங்கை இராணுவ போர் கருவி படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் ஈ.எம்.எம் பெர்னாண்டோ எச்டிஎம்சீ எல்எஸ்சீ ஏஏடிஓ அவர்களின் வழிகாட்டலின் கீழ் இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் அட்டை 14 ஒக்டோபர் 2024 அன்று தொம்பகொடவில் உள்ள இலங்கை இராணுவ போர் கருவி படையணி தலைமையகத்தில் வெளியிடப்பட்டது. இந்த முத்திரை தைரியம், அர்ப்பணிப்பு சேவை மற்றும் படையணியின் முக்கிய பங்கு ஆகியவற்றின் மதிப்புகளை பிரதிபலிப்பதுடன் அதன் செழுமையான வரலாற்றை எடுத்துக்காட்டும் விரிவான கலைப்படைப்புகளைக் கொண்டுள்ளது.
இந் நிகழ்வில் மேற்கு மாகாண பிரதி தபால் மா அதிபர் திரு. கே.ஏ.என்.பி. கதனாராச்சி அவர்களுடன் கொழும்பு தபால் மா அதிபர் என்.லெனோரல் மற்றும் தபால்தலைகள் பணியகத்தின் பணிப்பாளர் எல்.ஜி.என். டி சில்வா ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.