14th October 2024 18:10:01 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் வீடிஎஸ் பெரேரா அவர்கள் 64 வது காலாட் படைப்பிரிவின் 18 வது தளபதியாக மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் 12 ஒக்டோபர் 2024 அன்று 64 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.
வருகை தந்த தளபதிக்கு, 64 வது காலாட் படைப்பிரிவின் படையினர் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கி கெளரவித்தனர். அதனை தொடர்ந்து அவர் மரக்கன்று நட்டியதுடன் குழு படமும் எடுத்துக்கொண்டார்.
பின்னர், தளபதி முறையான மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் கடமைகளை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். சம்பிரதாயங்களுக்குப் பிறகு, புதிய படைப்பிரிவு தளபதி படையினருக்கு உரையாற்றியதுடன் அனைத்து நிலையினருடனான தேநீரில் கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.